ரிஹ்லா துளுநாடு — மொழிகளின் நிலம் – 1
முப்பது வருடங்களுக்கும் மேலாக வடகேரளத்துக்குத் தொடர்வண்டியில் பயணிக்க நேரும்போதெல்லாம் தவறாமல் கேட்டுவரும் ‘மங்களாபுரம்’ எனக் கேரளியர்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘மங்களூர்’ நகரம். கடைசியெழுத்தான ‘ர்’ஐ உருட்டி இப்பொழுது ‘மங்களூரு’வாகியிருக்கும் மங்களூரை இருமுறைக் கடந்துபோக நேரிட்டிருக்கிறதே தவிர இறங்கிக் காலாறும் வாய்ப்புக் கிடைத்ததில்லை.
