புத்தகக் கிராமம்
புத்தகங்கள் எண்ணிறந்த உலகங்களைக் கட்டியிழுத்து நம்முள் கொண்டு வருபவைதான். புத்தகங்களை வாங்குவதற்கான மெனக்கெடல் என்பது ஒரு திறன்பேசி திரைத் தடவலில் முடிந்து விடுவதால் ஏற்கனவே புத்தகங்களுக்காக நடந்த மெனக்கெடல்களுடன் சிறு பயணங்களும் தேவையற்றதாகி விட்டிருக்கின்றன. ஆனால் புத்தகங்களைத் தங்கள் அன்றாடத்திற்குள் வைத்துக் கொண்டாடுகிற ஒரு கிராமமிருப்பதும் அக்கிராமத்திற்கான பயணமென்பதும் உடுகுலத்திலிருந்து அண்டப்பெருவெளிக்குள்ளான பெரும் பாய்ச்சலேதான்.
